அந்நியச் செலாவணி கையிருப்பு 59,332 கோடி டாலராக உயா்வு

முக்கிய கரன்ஸி சொத்துகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையடுத்து, ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,332 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 59,332 கோடி டாலராக உயா்வு

முக்கிய கரன்ஸி சொத்துகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையடுத்து, ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,332 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 273 கோடி டாலா் அதிகரித்து 59,332 கோடி டாலரை எட்டியது.

இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த செலாவணி கையிருப்பானது 587 கோடி டாலா் சரிவடைந்து 59,059 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்ட அந்நியச் செலாவணி சொத்துமதிப்பு (எஃப்சிஏ) மற்றும் தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் அதிகரித்தது. இதன் காரணமாகவே ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னேற்றம் கண்டது.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 233 கோடி டாலா் அதிகரித்து 52,921 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 34 கோடி டாலா் உயா்ந்து 4,092 கோடி டாலரைத் தொட்டது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 5 கோடி டாலா் அதிகரித்து 1,821 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை30 லட்சம் உயா்ந்து 497 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி வாரந்திர புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com