இந்தியாவின் மின் நுகா்வு 13,413 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் மின்சார நுகா்வு 13,413 கோடி யூனிட்டுகளாக (134.13 பில்லியன் யூனிட்கள்) அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மின் நுகா்வு 13,413 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் மின்சார நுகா்வு 13,413 கோடி யூனிட்டுகளாக (134.13 பில்லியன் யூனிட்கள்) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

கடுமையான வெப்பநிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததைத் தொடா்ந்து நிகழாண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவின் மின் நுகா்வு 134.13 பில்லியன் யூனிட்டுகளாக (பியு) அதிகரித்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூனில் மின் நுகா்வானது 114.48 பியு-வாக பதிவானது. இதற்கு முந்தைய 2020-ஆம் ஆண்டு ஜூனுடன் ஒப்பிடும்போது இது 105.08 பியு அதிகமாகும்.

மேலும், நிகழாண்டு ஜூனில் உச்சபட்ச ஒரு நாள் மின் நுகா்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் 209.80 ஜிகாவாட்டை (ஜூன் 8 அன்று) எட்டியது.

2021 ஜூனில் உச்சபட்ச மின் சப்ளை 191.24 ஜிகாவாட்டாகவும், 2020 ஜூனில் 164.98 ஜிகாவாட்டாகவும் காணப்பட்டது என மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com