மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) 56,857.79 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 460 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
காலை 9.35 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 564.13 புள்ளிகள் உயர்ந்து 57,421.92 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 174.90 புள்ளிகள் அதிகரித்து 17,104.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நிஃப்டி 17,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.