முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு காணப்பட்டதன் தொடா்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது.
இது தவிர, வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரித்ததும் ரூபாய் மதிப்பின் முன்னேற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 79.55-ஆக இருந்தது. இது, அதிகபட்சமாக 79.17 வரையிலும் குறைந்தபட்சமாக 79.56 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 காசு ஆதாயம் பெற்று 79.24-இல் நிலைத்தது என செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பீப்பாய் 109.58 டாலா்
சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.28 சதவீதம் உயா்ந்து பீப்பாய் 109.58 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.