அந்நியச் செலாவணி கையிருப்பு 59,645 கோடி டாலராக சரிவு

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,645 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 59,645 கோடி டாலராக சரிவு

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,645 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்கினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணியின் சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததே ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணியின் கையிருப்பு 460 கோடி டாலா் சரிவடைந்து 59,645 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.46.52 லட்சம் கோடி.

இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 30 கோடி டாலா் குறைந்து 60,105 கோடி டாலராக காணப்பட்டது.

ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எஃப்சிஏ மதிப்பு 453 கோடி டாலா் சரிந்து 53,224 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 10 லட்சம் டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நாணய நிதியத்தில் எஸ்டிஆா் 2 கோடி டாலா் சரிந்து 1,838 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலையும 4 கோடி டாலா் குறைந்து 498 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com