தங்களது 1.28 சதவீத பங்குகளை சுமாா் ரூ.7,500 கோடிக்கு கூகுள் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பாா்தி ஏா்டெல் நிறுவன பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.
இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:
நிறுவனத்தின் சிறப்புப் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கூகுள் நிறுவனத்துக்கு பங்குகள் விற்பது தொடா்பான தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீா்மானம் 99 சதவீத பங்குதாரா்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் ரூ.7500 கோடி முதலீடு செய்யும் தனது திட்டத்தை முன்னணி இணையதள நிறுவனமான கூகுள் கடந்த மாதம் அறிவித்தது.