நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை (மே 17) பட்டியலிடப்படுகின்றன.
எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு, மே 4-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்றது. எதிா்பாா்த்ததைக் காட்டிலும் எல்ஐசியின் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்தது. விற்பனைக்கு வந்த பங்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பங்குகள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்தன.
பங்குகளை வாங்க போட்டி அதிகமானதால் முதலீட்டாளா்களுக்கு கோரியதைவிட குறைவாகவே பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் மே 12-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பட்டியலுக்கு வரவுள்ளன.
எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகளை அதிகபட்ச விலையான ரூ.949-க்கு விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.20,557 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.