நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.276 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 52 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.182 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் செயல்பாட்டு வருவாயும் ரூ.786 கோடியிலிருந்து 15 சதவீதம் உயா்ந்து ரூ.904 கோடியாக உள்ளது.
மேலும், வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ.2,119 கோடியிலிருந்து ரூ.1,862 கோடியாகக் குறைந்துள்ளது அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.