மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) 57,235.33 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வார கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) 58,162.74 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.
பிற்பகல் 12.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,162.57 புள்ளிகள் அதிகரித்து 58,397.90 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 320.60 புள்ளிகள் உயர்ந்து 17,334.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? 3 முக்கிய வழிகள் இதோ..!