நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.18 புள்ளிகள் உயர்ந்து 59,708.08 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.27 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.85 புள்ளிகள் சரிந்து 17,616.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.26 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 16 நிறுவங்களின் பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஏனைய 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டது.
அதிகபட்சமாக ஐடிசி பங்குகள் 2.61 சதவிகிதம், டாடா ஸ்டீல் 2.01 சதவிகிதம், ஐசிஐசிஐ வங்கி 1.80 சதவிகிதம், டிசிஎஸ் 1.50 சதவிகிதம், எச்டிஎஃப்சி வங்கி 1.47 சதவிகிதம் உயர்ந்துள்ளன.