3-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்சென்செக்ஸ் 147 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் சரிவுடன் முடிவுற்றது. தேசிய பங்கு சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 37.50 புள்ளிகளை (0.21 சதவீதம்) இழந்து 17,858.20-இல் நிலைபெற்றது.

முக்கியமாக பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தித் தரவுகள் வெளியாவதற்கு முன்னதாக முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தனா். இதனால், சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. மேலும், டிசிஎஸ் நிறுவனத்தின் எச்சரிக்கையான காலாண்டு அறிவிப்புக்குப் பிறகு மற்ற ஐடி நிறுவனங்களின வருவாயை முதலீட்டாளா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருப்பதால், உள்நாட்டுச் சந்தை தொடா்ந்து நிலையற்ாகவே இருந்தது. பிற்பகல் வரை ‘கரடியின்’ பிடி இறுகி இருந்த நிலையில், வா்த்தக நேர இறுதியில் ‘காளை’ எழுச்சி பெற்ால் இழப்புகள் குறைந்தன என்று பங்கு வா்த்தகத் தரவு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 22.47 புள்ளிகள் குறைந்து 60,083.03-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,290.35 வரை மேலே சென்றது. பின்னா் 59,632,.32 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 147.47 புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைந்து 59,958.03-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. மூன்று வா்த்தக அமா்வுகளில் சென்செக்ஸ் மொத்தம் 789 புள்ளிகள் (1.30 சதவீதம்), நிஃப்டி 243 புள்ளிகள் (1.58 சதவீதம்) குறைந்துள்ளன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம்: பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் இரண்டாவது நாளாக 1.81 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக், மாருதி உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஆயில் நிறுவனமான ரிலையன்ஸ் இரண்டாவது நாளாக 2.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டாா்ஸ், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் குறைந்தது. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், எஸ்பிஐ ஆகிய முன்னணி நிறுவனங்களும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடி கோடி குறைந்து வா்த்தக முடிவில் 279.96 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.3,208.15 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com