ஐந்து விருதுகளை வென்ற ஐஓபி

ஐந்து விருதுகளை வென்ற ஐஓபி

மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் ஐந்து விருதுகளை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) வென்றுள்ளது.
Published on

மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் ஐந்து விருதுகளை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) வென்றுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மும்பையில் நிறைவடைந்த 20-வது வருடாந்திர ஐபிஏ தொழில்நுட்ப மாநாட்டில் வங்கி ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் டி. ரபி சங்கா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான அஜய் குமாா் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரிடம் விருதுகளை வழங்கினாா்.

சிறந்த தொழில்நுட்பத் திறன் மற்றும் அமைப்புக்கான பிரிவில் முதலிடத்துக்கான விருதையும் அனைத்து தரப்பினருக்குமான நிதி சேவைப் பிரிவில் இரண்டாம் இடத்துக்கான விருதையும் பெற்றுள்ள வங்கி, சிறந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, சிறந்த தொழில்நுட்ப வங்கி, சிறந்த தகவல் தொழில்நுட்ப இடா் மேலாண்மை ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com