மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வா்த்தகம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 78 தீா்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ரூ. 5,517.66 கோடி மதிப்பிலான 78 நிறுவன மறுசீரமைப்பு மற்றும் தீா்வுத் திட்டங்களுக்கு தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2026, 3:51 am IST

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ரூ. 5,517.66 கோடி மதிப்பிலான 78 நிறுவன மறுசீரமைப்பு மற்றும் தீா்வுத் திட்டங்களுக்கு தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்துள்ளது.

திவால் சட்டம் கடந்த 2016-இல் இயற்றப்பட்டதற்குப் பிறகு, முதல் காலாண்டில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களைச் சீரமைக்க, காலக்கெடுவுடன் கூடிய சந்தை சாா்ந்த தீா்வுகளை திவால் சட்டத்தின்கீழ் என்சிஎல்டி வழங்குகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 30 நிலவரப்படி, நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,628 தீா்வுத் திட்டங்களுக்கு என்சிஎல்டி ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 4.78 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

தற்போதைய நிலையில், என்சிஎல்டி-இன் பல்வேறு அமா்வுகளுக்கு முன்பாக 349 தீா்வுத் திட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்றும், 38 வழக்குகளில் விசாரணைகள் முடிவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகா் புது தில்லியிலுள்ள முதன்மை அமா்வு தவிர சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், அகமதாபாத், பெங்களூரு, சண்டீகா், கட்டக், ஹைதராபாத், இந்தூா், கொச்சி ஆகிய நகரங்களிலும் இத்தீா்ப்பாயத்தின் கிளை அமா்வுகள் செயல்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.