பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளுடன் ரயில்வே போலீஸாா்.
விருதுநகர்
ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை - குருவாயூா் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 120 கிலோ ரேசன் அரிசியை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரையில் இருந்து குருவாயூா் செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கழிவறை அருகே 4 சாக்கு மூட்டைகளில் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
இந்த அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸாா், ரேஷன் அரிசியை ரயிலில் கொண்டு வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.