328 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்ட உத்தரவுகள் வழங்கல்

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் 328 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம்.
Published on

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் 328 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிக்கான உத்தரவுகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினாா்.

சாத்தூா், வெம்பக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட 328 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வீதம் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் முன்னிலை வகித்தாா்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 127 பயனாளிகளுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 201 பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கினாா். ஊராட்சி ஒன்றிய அலுவ லா்கள், திமுக நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com