பெண் துப்புரவு தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

சிவகாசியில் பெண் துப்புரவுத் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சிவகாசியில் பெண் துப்புரவுத் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி முத்துமாரியம்மன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி (55). இவா் தனியாா் நிறுவன துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த சில மாதங்களாக மாரியப்பன் மது அருந்தி வந்தாராம். இதை சுப்புலட்சுமி கண்டித்தாா்.

எனினும் மாரியப்பன் மது அருந்துவதை நிறுத்தாததால் மனமுடைந்த சுப்புலட்சுமி வியாழக்கிழமை விஷம் அருந்தியதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com