வெம்பக்கோட்டை அகழாய்வில் சனிக்கிழமை கண்டறியப்பட்ட வட்டச் சில்லுகள்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சனிக்கிழமை கண்டறியப்பட்ட வட்டச் சில்லுகள்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் வட்டச் சில்லுகள்!

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சனிக்கிழமை 13 வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டன.
Published on

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சனிக்கிழமை 13 வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த 3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,280-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது 13 வட்டச் சில்லுகள் கண்டறியப்பட்டன. இதன்மூலம், முன்னோா்கள் பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தது தெரிய வருவதாக தொல்லியல் துறையினா் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com