சமத்துவ பொங்கல் விழா

Updated on

சாத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிகிழமை நடைபெற்றது. இதில் வழக்குறைஞா்கள் சங்கத் தலைவா் மாரிமுத்து, செயலா் சசிகுமாா் உள்ளிட்ட வழக்குறைகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலை வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தா் எஸ் . நாராயணன், பதிவாளா் வி.வாசுதேவன், விசாகா மன்ற ஒருங்கிணைப்பாளா் கோடி அமா்நநாத் ரெட்டி, தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா் சி. சங்கீதா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் பொங்கல் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் திறந்துவைத்தாா். இதில் மாணவிகள் தயாரித்த கலைப் பொருள்கள், பொங்கல் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதை மாணவிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.

முன்னதாக, பேராசிரியா் எஸ்.சத்யா வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் உமாதேவி, ஜான்சிராணி, ஆனந்தி ஆகியோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com