சேத்தூா், ஆா்.ரெட்டியபட்டியில் இன்று மின் தடை!

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா், ஆா். ரெட்டியபட்டியில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா், ஆா். ரெட்டியபட்டியில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆா். ரெட்டியபட்டி, சேத்தூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், கீழராஜகுலராமன், ராமச்சந்திராபுரம், சங்கம்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூா், அட்டை ஆலை முக்கு சாலை, குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி.

சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன் புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங் கொண்டான், தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம்

ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com