~ ~
விருதுநகர்
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி மாரியம்மாள் ( 78 ). இவா் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி மாரியம்மாளை உயிருடன் மீட்டனா்.

