விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கத்தாளம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகள் சாந்தி (32). இவருக்கும், ராஜபாளையம் அருகேயுள்ள முத்தாநதியைச் சோ்ந்த ராமா் மகன் ராமசுப்புக்கு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

இந்த நிலையில், ராமசுப்புவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், சாந்தி அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதனால், மனமுடைந்த காணப்பட்டு வந்த சாந்தி, வீட்டில் விஷம் குடித்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Open in App
Dinamani
www.dinamani.com