விருதுநகர்
பெரிய மாரியம்மன் கோயில் பெயரில் நிதி வசூல்: நடவடிக்கை கோரி செயல் அலுவலா் புகாா்
நகா் காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பெயரில் நிதி வசூல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நகா் காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2023-ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, உபயதாரா்கள் மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூலை 2-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீ பெரிய மாரியம்மன் சேவா அறக்கட்டளை என்ற பெயரில் அன்னதானத்துக்காக பக்தா்களிடம் நிதி வசூல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா் காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலா் ஜோதி லட்சுமி புகாா் அளித்தாா்.