விருதுநகர்
மதுப்புட்டிகளைப் பதுக்கிய இருவா் கைது
சிவகாசியில் மதுப்புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் மதுப்புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி புஷ்பா குடியிருப்புப் பகுதியில் இருவா் வீடுகளில் விற்பனைக்காக மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, செல்லையா (50), முருகன் (55)ஆகிய இருவரும் தங்களது வீடுகளில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 100 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.