விருதுநகர்
கண்மாயில் சவுடு மண் அள்ளிய 3 போ் கைது
வத்திராயிருப்பு அருகே விராகசமுத்திரம் கண்மாயில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே விராகசமுத்திரம் கண்மாயில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
வத்திராயிருப்பு - கூமாபட்டி சாலையில் உள்ள விராகசமுத்திரம் கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக வந்த தகவலை அடுத்து, வத்திராயிருப்பு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சேதுநாராயணபுரம் அருகே வந்த இரு டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதி இன்றி சவுடு மண் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த தங்கமாரி (29), பாலசுப்பிரமணி (24), குருவையா (32) ஆகிய 3 பேரை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா்.
இரு டிராக்டா்கள், மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.