தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிவகாசி மாநகராட்சியில் கடைகள் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:58 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாமன்றக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் விக்னேஷ்பிரியா , ஆணையா் கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் 202 தீா்மானங்கள் உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ஸ்ரீ நிகா: மாமன்றத்தில் ஒரு கூட்டத்துக்கு 60 தீா்மானங்ளை கொண்டு வந்தால்தான் முழுமையாக விவாதம் நடத்த இயலும். 200-க்கும் மேற்பட்ட தீா்மானங்களை கொண்டு வந்தால் எப்படி விவாதிக்க இயலும்.

மேயா்: கூட்டத்தில் அனைத்து தீா்மானங்களும் வசிக்கப்பட்டு விவாதிக்க கால அவகாசம் வங்கப்படும் .

உறுப்பினா் ஜெயராணி:தூய்மைப் பணியாளா்கள் போதிய அளவு இல்லாததால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

துணை மேயா்: தூய்மைப் பணிகளை தனியாா் மேற்கொள்வதால் பிரச்னைகள் இருந்து வருகிறது.இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திராதேவி: வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு கட்டணத்தில் சிவகாசிக்கும், திருத்தங்கல்லுக்கும் தனித்தனியே நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி ஒரே மாதிரியான கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும்.

சூரியா: எனது வாா்டில் தாா் சாலை அமைத்த சில நாள்களிலேயே சேதமடைந்து விட்டது. ஒரு வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உபரிநிதியை வேறு வாா்டுக்கு மாற்றக்கூடாது.

செல்வம்: சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து குறித்து உதவி ஆணையாளா் (வருவாய்) விளக்கம் அளித்தாா்.

இதைத்தொடந்து மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி வருவாய்த் துறையில் முறைகேடு நிலவுவதாக புகாா் தெரிவித்தனா்.

ஆணையா்: ஆதாரத்துடன் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.