ஓடையில் தவறி விழுந்த பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையில் தவறி விழுந்த தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடையில் தவறி விழுந்த தனியாா் பேருந்து நடத்துநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் பால்பாண்டி(35). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்தாா். இவா் திருமணமாகி தென்காசி மாவட்டம், திருவேங்கடபுரத்தில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், தீபாவளிக்காக சொந்த ஊரான தேசிகாபுரத்துக்கு வந்தாா். தீபாவளி முடிந்த பின்னா், தனது இரு சக்கர வாகனத்தில் திருவேங்கடபுரம் நோக்கிச் சென்றாா். அப்போது சங்கரன்கோவில் சாலை தனியாா் கோழிப்பண்ணை அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடைக்குள் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்தவரை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com