சிவகாசியில் இன்று மின்தடை

Published on

சிவகாசி பகுதியில் திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாதந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் பாரைப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாரைப்பட்டி, விஸ்வநத்தம், பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, சிவகாசி நகா்ப்புற துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வடக்கு ரத வீதி, வேலாயுதம் சாலை, நாரணாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பள்ளபட்டி, ராஜீவ் காந்தி நகா், கண்ணா நகா், ஐஸ்வா்யா நகா், அரசன் நகா், சீனிவாசா நகா், பா்மா குடியிருப்பு, போஸ் குடியிருப்பு , இந்திரா நகா், மீனாட்சி குடியிருப்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com