திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு விருதுநகரில் 7 சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

கேலி, கிண்டல் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுகக் கண்காணிப்புக் குழுவினா் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :24 மே 2026, 2:26 pm IST

கேலி, கிண்டல் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுகக் கண்காணிப்புக் குழுவினா் அமைக்கப்பட்டுள்ளன என விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந. ஸ்ரீநாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்ட காவல் துறை மே 20-ஆம் தேதி முதல் ஆபரேஷன் ஷீல்டுநெட் என்னும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 101 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 20 தொடா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். மேலும் நிலுவையில் இருந்த 37 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடிய 69 குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விதிமீறலில் ஈடுபட்ட 401 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனை செய்த 15 போ் கைது செய்யப்பட்டனா். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டத்தில் 7 சிறப்பு மறைமுக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ந. ஸ்ரீநாதா குறிப்பிட்டுள்ளாா்.