
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.
இவர், தொழிலதிபர் ராகுல் வர்மாவை கடந்தாணடு மார்ச் 23 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார்.
இதனிடையே தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வந்து செல்ல சிரமமாக இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் சீதாராமன் தொடரிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். ஆனால், தற்போது அவர் நளதமந்தி என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரியங்கா நல்காரி, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சமீபத்தில் நீக்கினார். அதேபோல், அவரது கணவரும் பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார்.
பிரியங்கா நல்காரியும் அவரது கணவர் ராகுல் வர்மாவும் பிரிந்ததாக தகவல் பரவி வந்த நிலையில், அவரே 'நான் தற்போது தனியாகத்தான் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்
சில நாள்களுக்கு முன்பு நடிகை பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா நல்காரி கணவர் ராகுல் வர்மாவுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், பிரியங்கா மீண்டும் கணவர் ராகுல் வர்மாவுடன் சேர்ந்து விட்டாரா என்று குழப்பமடைந்துள்ளனர்.
மேலும், இனிமேலாவது இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.