* "பழங்கள் வாங்கிக்கிட்டு பீக் அவர்ல பஸ்ல போனேனா?''
"ஏன்.. என்ன ஆச்சு?''
"கசக்கி பிழிஞ்சிட்டாங்க''
பர்வீன் யூனுஸ், ஈரோடு.
* "ஏங்க! மழையே இல்லையே! எதுக்கு குடையத் தூக்கிட்டுப் போறீங்க?''
"குடையால நடக்க முடியாதே!''
எ.எல்.சண்முகம், கண்டனூர்.
* "சார் நான் ஒரே கணக்கை பத்து முறை போட்டு பார்த்தேன்''
"வெரிகுட். விடை என்ன?''
"பத்து விடை வந்தது. எது சரின்னு தெரியலை''
சீ.பிரவீன், தருமபுரி.
* மனைவி: வேலைக்காரி வர்ற நேரமாச்சு போலிருக்கு.
கணவன்: எப்படி சொல்ற?
மனைவி: நீங்க மூஞ்சிக்கு பவுடரெல்லாம் போட்டுக்கிறீங்களே.
கணவன்: !!!!
வி.சாரதி டேச்சு, சென்னை.