கணவனும் மனைவியும் ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ரயில் கிளம்பவே கணவர் ஓடிச் சென்று ரயிலில் ஏறிக் கொண்டார். மனைவியால் ஓட முடியாததால் பிளாட்பாரத்திலேயே தங்கிவிட்டார்.
அவரிடம் பக்கத்தில் இருந்த ஒருவர், "கவலைப்படாதீங்க... அடுத்த ட்ரெயின் இன்னும் 5 நிமிஷத்துல வந்துடும். அதுல போய் உங்க வீட்டுக்காரரை பிடிச்சுடலாம்'' என்றார்.
அதற்கு அந்தப் பெண் சொன்னாள்: ""நான் எங்க அம்மா வீட்டுக்கு போறதுக்காக அவர் என்னை ரயில் ஏற்றிவிட வந்தார். அந்த சந்தோஷத்துல தலைகால் புரியாமல் ட்ரெயினில் ஏறி அவர் போறார்''
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.