திரைக் கதிர்

"இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார்.
திரைக் கதிர்


"இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். இதில் ஒரு கமல்ஹாசன் தான். வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அவரது பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். முதல் பாகத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதில் சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். 

அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். சமீபத்தில் தனது பிறந்தநாளை புளோரிடா நகரிலுள்ள மியாமி கடற்கரையில் குடும்பத்துடன் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் சில நாட்கள் தொடர்ந்தது.  நடுக்கடலில் படகில் சென்றபடி கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா சோப்ரா, திடீரென்று கால் இடறி கடலில் தலைகுப்புற விழுந்தார். கடலில் தத்தளித்த அவரை மீட்க நிக் ஜோனஸ் முயன்றார். இந்த சம்பவத்தைப் பார்த்த கடல் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த  பிரியங்கா சோப்ராவை மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிரியங்கா சோப்ரா கடலில் விழுந்த புகைப்படக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திருமணத்துக்குப் பின்பு பெரும்பாலான பெண்கள் தங்களது அழகைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.  ஆனால்  40 வயதைக் கடந்தாலும் உடற்கட்டைப் பராமரிக்கும் நடிகைகள் இருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டுவரை கிரிக்கெட் வர்ணனையில் ஆண்கள்தான் கொடிகட்டிப் பறந்தனர். 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் மந்த்ரா பேடி. திரைப்பட நடிகையான இவர் வர்ணனை செய்யும் போது படுகவர்ச்சியான உடைகளில் தோன்றி இளவட்டங்கள் முதல் பெரிசுகள் வரை கவர்ந்திழுத்தார். சமீபகாலமாக நடிகைகள் சுற்றுலாப் பயணமாக மாலத்தீவுக்குப் பறந்துவிடுகின்றனர். நீச்சல் உடை அணிந்து தங்கள் இஷ்டத்துக்கு கடலில் நீந்தி மகிழ்கின்றனர்.  மந்த்ராபேடி அங்குள்ள மரமொன்றில் ஒயிலாகச் சாய்ந்து நின்றபடி சன் பாத் எடுக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். ""சூரிய ஒளிக்கீற்றுடனும், நீல கடலுடனும் என்னுடைய நாளை இன்று நல்லமுறையில் கழித்துள்ளேன். இதைவிட ஒரு சந்தோஷமான இடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..'' என குறிப்பிட்டிருக்கிறார் மந்த்ரா.

கன்னடத்தில் நடித்து வந்த  ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக  "கீத கோவிந்தம்'  படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இப்போது "டியர் காம்ரேட்' என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடத்திலும் டப்பிங்  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த மொழியில் நடிப்பது கஷ்டம் என ராஷ்மிகாவிடம் கேட்ட போது, ""கன்னடத்தில் பேசி நடிப்பதுதான் கஷ்டம்'' எனச் சொல்லியிருக்கிறார் ராஷ்மிகா. இதைக் கேட்டு கன்னட அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. ""கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா கன்னடம் பேசுவது கஷ்டம் எனக் கூறுவதா? மற்ற மொழிகளில் பிரபலம் அடைய தனது மொழியைப் புறம் தள்ளுவதா?'' என கொதித்து எழுந்துள்ளன. இந்தநிலையில் சுட்டுரையில் "பாய்காட்  டியர் காம்ரேட்' என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ராஷ்மிகாவுக்கும் அவரது படத்துக்கும் எதிராகப் போராட்டத்தை கன்னடர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் ராஷ்மிகா கலக்கம் அடைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com