(கோவில்பட்டியில் ஓர் ஆட்டோவில்)
வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி - புன்னகை.
மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.
(காடுவெட்டி அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
கோவில் வாழ்க்கை
தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.
(கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயர்)
32 பஉஉபஏ ஈஉசபஅக இஅதஉ
வி.வெண்ணிலா, எல்லப்புடையாம்பட்டி.
(சென்னையில் உள்ள வணிகவளாகத்தில் ஒரு தேநீர்க்கடையின் பெயர்)
நம்ம தேநீர்கடை
ஆர்.ராஜகோபாலன், சென்னை.
ஒருவன் தட்டிக் கேட்டால்
கிறுக்கன் என்கிறார்கள்.
எல்லாரும் தட்டிக் கேட்டால்
விழிப்புணர்வு என்கிறார்கள்.
எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்.
(சென்னை சிட்லபாக்கத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது நண்பரும் மனைவியும்)
"" என்னம்மா... டிபன் ரெடியா? இல்ல... ஓட்டல்ல சாப்பிட்டுக்கவா?''
""பத்துநிமிஷம் வெயிட் பண்ணுங்க''
""அதுக்குள்ள ரெடி ஆகிடுமா?''
""இல்லை... 10 நிமிஷத்துல நானும் ரெடி ஆகிவிடுவேன். சேர்ந்தே ஓட்டலுக்குப் போவோம்''
எஸ்.மாரிமுத்து, சென்னை-64.
(காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தில் இரு பெண்கள்)
""எதிர்வீட்டு மாமியிடம் ஒரு மணி நேரம் பேசியும் ஒரு பயனுமில்லைடி''
""நீ என்ன சொன்னே... அவங்க என்ன கேட்கலை?''
""நான் போட்டிருக்கிற நெக்லûஸப் புதுசான்னு கடைசிவரை ஒரு வார்த்தை கேட்கலைடி''
அ.பூங்கோதை, செங்கல்பட்டு.
கடையில் நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார் சுந்தரம். கூடவே அவருடைய மனைவியும் கடைக்கு வந்திருந்தாள். பழக்கப்பட்ட கடைக்காரருக்கோ ஒரே ஆச்சரியம். சுந்தரத்துக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அவர் இதுவரை பிஸ்கெட் வாங்கியதில்லை.
""என்ன சார் நிறைய பிஸ்கெட் வாங்குறீங்க? பேரப் பிள்ளைகள் எல்லாம் வந்திருக்காங்களா?'' என்று கேட்டார் கடைக்காரர்.
""இல்லையில்லை. நாங்க ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறோம். அதனால வாங்கிட்டுப் போறோம்'' என்றார் சுந்தரம்.
""யாராவது சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனா பழங்களை வாங்கிட்டுப் போவாங்க... நீங்க பிஸ்கெட் வாங்கிட்டுப் போறீங்க?''
"" அது வேறொண்ணுமில்லீங்க. சிலருக்கு சில பழம் பிடிக்கும். சில பழங்கள் பிடிக்காது. நாம எதை வாங்கிட்டுப் போறது? அது மட்டுமில்லை... நாம வாங்கிட்டுப் போற பழத்தை உடனே சாப்பிடலைன்னா ரெண்டு நாள்ல அழுகிப் போயிடும்'' என்றார் சுந்தரம்.
""சூப்பர் சார்... ஒரு பழம் வாங்கிட்டுப் போறதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்களே...'' கடைக்காரர் பாராட்டினார்.
பிஸ்கெட் வாங்கிவிட்டு கடையிலிருந்து சிறிது தூரம் வந்த பின், மனைவி சொன்னாள்:
""பழம் வாங்கினா 200 ரூபாய்க்கு மேல செலவாகியிருக்கும். ஒரு நூறு ரூபாய்க்கு பிஸ்கெட் வாங்கிட்டு... என்னமா கடைக்காரன்கிட்டே பேசுறீங்க? உங்க கஞ்சத்தனத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா?''
சுந்தரம் சத்தமில்லாமல் வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.
சி.ஸ்ரீரங்கம், திருச்சி-13
நம்மைச் சுற்றி உள்ளவர்களை நம்மால் மாற்ற முடியாது.
ஆனால், நம்மைச் சுற்றி யார்
இருக்க வேண்டும் என்பதை மாற்றலாம்.
இசைவாணி, பாளையங்கோட்டை.
அப்படீங்களா!
சயனைடு ஒரு கொடிய நஞ்சு என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த கொடிய நஞ்சு நாம் விரும்பி உண்ணும் ஒரு பழவிதையில் இருக்கிறது.
ஆப்பிள் விதைகளில் Amygdalin என்ற வேதிப்பொருள் உள்ளது. ஆப்பிள் விதைகளில் மட்டுமல்ல, பாதாம் தோல், இலந்தைப் பழம், செர்ரி பழம் ஆகியவற்றின் விதைகளிலும் இந்த Amygdalin உள்ளது. இது உடலுக்குள் சென்று மாற்றம் அடையும்போது ஹைட்ரஜன் சயனைடு என்ற நஞ்சை வெளியிடுகிறது. விதையை முழுமையாக விழுங்கிவிட்டால், பாதிப்பு இல்லை. விதையைக் கடித்து மென்று தின்றால் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
மனித உடலுக்குள் 0.2 இலிருந்து 1.6 மி.கிராம் வரை சயனைடு சென்றால் ஆபத்தானது. இதயம் செயல் இழந்துவிடுவது, நுரையீரல் நின்றுவிடுவது, கோமாநிலை, தசைகள் செயல் இழந்துவிடுவது உட்பட பல பாதிப்புகள் ஏற்படலாம். மரணம் கூட ஏற்படலாம்.
குறைந்த அளவு சயனைடு உடலுக்குள் சென்றால், வாந்தி, வயிற்று வலி, மயக்கம், தலைவலி போன்றவை ஏற்படலாம்.
1 கிராம் ஆப்பிள் விதையில் 1 முதல் 4 கிராம் Amygdalin இருந்தாலும், அது வெளிப்படுத்தும் சயனைடின் அளவு மிகவும் குறைவு. எனவே குறைந்தது 200 ஆப்பிள் விதைகள் முதல் 5000 ஆப்பிள் விதைகள் வரை ஒருவர் உட்கொண்டால்தான் ஆபத்து ஏற்படும்நிலை உருவாகக் கூடும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆப்பிள் விதைகளும் நஞ்சாகிவிடும் என்றும் சொல்லலாம்.
என்.ஜே., சென்னை-58.