நிவேதா நீட் எழுதுகிறாள்

இன்று வரப்போகிற "நீட்' தேர்வு முடிவை எதிர்பார்த்து பதைபதைப்புடன் காத்திருந்தாள் நிவேதா. இந்த தேர்வின் முடிவில்தான் தன்னுடைய எதிர்காலமே இருக்கிறது.
நிவேதா நீட் எழுதுகிறாள்

இன்று வரப்போகிற "நீட்' தேர்வு முடிவை எதிர்பார்த்து பதைபதைப்புடன் காத்திருந்தாள் நிவேதா. இந்த தேர்வின் முடிவில்தான் தன்னுடைய எதிர்காலமே இருக்கிறது. அப்பாவிடம் பண்ணியிருக்கிற சவாலில் ஜெயித்தால் தான் அப்பாவின் முகத்தில் விழிக்க முடியும்.
"இறைவா எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ண வச்சிருப்பா, நல்லாத்தான் எழுதிருக்கேன்''"
குளக்கரை ஆஞ்சநேயரை வலம் வந்தபடி மனசுக்குள் இமைகள் படபடக்க வேண்டிக் கொண்டிருந்தாள் நிவேதா.
நல்ல மார்க் எடுக்காமல் அப்பாவிடம் செய்திருக்கிற சவாலில் தோற்றுவிட்டால், எங்காவது போய் எம்ப்ராய்டரி கற்றுக் கொள்வது, கம்ப்யூட்டர் கிளாஸ் போவது என்று வாழ்க்கையே திசை மாறிப் போய்விடுமோ?"
நிவேதாவுக்கு நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்தது இந்த பயம்.
அன்று வந்திருந்த ப்ளஸ்-டூ ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தாள் நிவேதா.
பிரிண்ட் அவுட் எடுத்திருந்த ரிசல்ட் பேப்பருடன் அப்படியே ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
"அம்மா, நான் அறுநூறுக்கு ஐந்நூற்று தொண்ணூறு மார்க் வாங்கியிருக்கேம்மா. நான் தான் பள்ளிக்
கூடத்துலயே பர்ஸ்ட் மார்க். இத்தனைக்கும் இது புது பாடத்திட்டம்''
ரிசல்ட் பேப்பரைக் காட்டிக்கொண்டே சிறு பிள்ளையாய் குதித்தாள் நிவேதா.
அம்மா அப்படியே வாரி அணைத்துக்கொண்டு கொண்டாடுவாள் என்று எதிர்பார்த்தாள் நிவேதா.
ஆனால் அம்மா வசந்தி ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு மகளின் தலையை வருடினாள்.
அப்படியே முகம் வாடிப்போய்விட்டது, நிவேதாவுக்கு.
"என்னம்மா, இவ்ளோ சந்தோஷமான சேதி சொல்றேன், நீங்க சாதாரணமா சிரிக்கிறீங்க!''"
வாய்விட்டு கேட்டாள் நிவேதா.
"போங்கம்மா... உங்ககிட்ட சொன்னேன் பாரு, நான் அப்பா கிட்ட சொல்லப்போறேன்.''"
அப்பாவின் அறையை நோக்கி ஓடினாள் நிவேதா.
"ஏய்.. நிவேதா இங்க வா, அப்பா கிட்ட போய் சொன்னா, நீ இன்னும் அப்செட் ஆயிடுவே''"
"ஏம்மா... என்னாச்சு?'' "
"நீ நல்ல மார்க் எடுத்திருக்க, மேல படிக்கணும்னு ஆசைப்படறே! ஆனா, உங்க அப்பா வேற மாதிரியில்ல முடிவெடுத்திருக்காரு''"
"என்னம்மா சொல்றீங்க ?'' "
அதற்குள் சப்தம் கேட்டு அறையிலிருந்து வந்துவிட்டார் அப்பா வேலுமணி.
சந்தோஷமாய் அப்பாவிடம் ஓடிச்சென்று தான் எடுத்திருந்த மதிப்பெண்களை காட்டினாள் நிவேதா.
"வெரிகுட் நீவி, ரொம்ப சந்தோஷம்..''
அப்பாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை''.
"அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா நிவேதா?'' "
அப்பா ஏதோ பொடி வைத்துக் கேட்டார்.
"இல்லப்பா ஒண்ணும் சொல்லலியே...''"
"சரி... சரி... நானே சொல்லிடறேன்'' 
"காசிபாளைத்துலேந்து உன்னை பொண்ணு கேட்டு வந்தாங்க நிவேதா. ரொம்ப நல்ல இடம். பையன் பி.இ., படிச்சுகிட்டு சென்னையிலே செய்யறாரு''"
சொல்லி முடிப்பதற்குள் "அப்பா' என்று கத்தினாள் நிவேதா.
"அப்பா இவ்வளவு மார்க் எடுத்திருக்கேன். டாக்டருக்கு படிக்கணும்னு சொல்லிகிட்டு இருக்கேன். நீங்க என்னப்பா, மாப்பிள்ளை கல்யாணம்னு பேசிகிட்டு இருக்கீங்க?''"
"நல்ல இடம்டா நிவேதா, நாம தேடிப்போனாலும் கூட இப்படியொரு குடும்பம் கிடைக்காது''"
"அப்பா, எனக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகல! இப்பதான் ப்ளஸ்-டூ முடிச்சிருக்கேன்''
"ஒண்ணும் அவசரம் இல்ல நிவேதா. இன்னும் ஒரு வருஷம் போகட்டும், பதினெட்டு வயசு முடியட்டும். அதுவரைக்கும் வீட்ல சும்மா இல்லாம எம்பிராய்டரி, கம்ப்யூட்டர் கோர்ஸ்-ன்னு ஏதாவது படி, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்''"
"எனக்கு டாக்டருக்குப் படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பா, உயிரியல் பாடத்துல சென்டம் எடுத்திருக்கேம்ப்பா''
"எல்லாம் சரிதான் நிவேதா. நம்ம சாதி சமூகத்துல பொம்பளைப் புள்ளைங்கள சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுவாங்க நிவேதா. உனக்கும் தெரியும்ல, வயசுக்கு வந்த புள்ளைகள ரொம்ப நாளைக்கு வீட்ல வச்சிருக்கிறது இல்ல நிவி''
"அம்மா, அப்பா பாட்டுக்கு பேசிகிட்டு இருக்காங்க. நீங்க ஏதாவது சொல்லுங்கம்மா''"
அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு கெஞ்சினாள் நிவேதா.
"நான் என்ன தனியா சொல்லணும் நிவேதா? பொம்பளைப் புள்ளைங்களுக்கு நல்ல வரன் வர்றப்ப கல்யாணம் பண்ணி வக்கிறதுதான் நல்லது. அப்பா சொல்றதக் கேட்டுக்கோ. இவ்வளவு நாள் நீ படிச்சது போதும்''"
"என்னம்மா இன்னும் பழைய காலம் மாதிரியே பேசிகிட்டு இருக்கீங்க. என்னை படிக்க வைங்கம்மா, ப்ளீஸ்''
நிவேதாவின் எந்தக் கெஞ்சல்களையும், கண்டு கொள்ளாமல் போய் விட்டார்கள் அம்மாவும், அப்பாவும்."
அன்று முழுவதும் வீட்டின் அறையில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள் நிவேதா. அம்மா பல தடவை சாப்பிடக் கூப்பிட்டும் போகவே இல்லை. 
"என்னங்க காலைலேந்து நிவேதா எதுவுமே சாப்பிடலங்க. அழுதுகிட்டே இருக்கா. அவளோ தோழிங்க 
ஃபோன் பண்ணி கூட எடுக்க மாட்டேங்றா''"
தன் கணவரிடம் கம்ப்ளைண்ட் பண்ணிக்கொண்டிருந்தாள் வசந்தி.
"காலைலேந்து சாப்பிடலயா? நிவேதாவை இங்க வரச்சொல்லு''"
அப்பா கத்தினார்.
அப்பாவின் வற்புறுத்தலுக்காக ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடித்து விட்டு அப்பா முன் தலையை குனிந்து கொண்டு நின்றாள் நிவேதா.
"இங்க பாரு நிவேதா, டாக்டருக்கு படிக்கணும்னு ஆசைப்படற, பல லட்சம் பேர் நீட் எக்ஸாம் எழுதறாங்க, அவங்களோட போட்டி போட்டு ஜெயிக்கணும். அப்படி படிச்சு உன்னால டாக்டர் சீட் வாங்க முடியுமான்னு எனக்கு தெரியல''"
"எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா, ஒரு வருஷம் முழுக்க நீட் எக்ஸாம்க்கு படிச்சு பாஸ் பண்ணிடறேன். அரசாங்க கல்லூரியில சீட் கிடைக்கற அளவுக்கு மார்க் வாங்கிடுவேம்ப்பா. அப்படி இல்லைன்னா, நீங்க சொல்றதை நான் கேட்டுக்கறேன்பா''"
"சரி நிவேதா, நீ கேட்ட மாதிரியே உனக்கு ஒரு சான்ஸ் தாரேன். இந்த வருஷம் முழுக்க நீ நீட் எக்ஸாம்க்கு படி, கோச்சிங் சென்டர்ல கூட சேத்து விடறேன். நல்லா படிச்சி நல்ல மார்க் வாங்கி கவர்ன்மென்ட் காலேஜ்ல சீட் வாங்கிடணும். அந்த அளவுக்கு உன்னோட கட் ஆஃப் மார்க் இருக்கணும் நிவேதா. ஒரு வேளை மார்க் குறைஞ்சிருக்குன்னா, இன்னொரு சான்ஸ் கிடையாது. வர்ற நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோம். இதை நீ சேலஞ்சா எடுத்துக்க''"
"சரிப்பா'' தீர்க்கமா தலையாட்டினாள் நிவேதா.
"வாழ்த்துக்கள் நிவேதா''
"ரொம்ப நன்றிப்பா''
நிவேதா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நிவேதாவைத் தேடி அன்று மாலையே வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஓடிச்சென்று தலைமை ஆசிரியரை வரவேற்று நாற்காலியில் உட்காரச் சொன்னாள் நிவேதா.
தலைமை ஆசிரியர் வீடு தேடி வந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது வேலுமணிக்கு. " வணக்கம்" சொல்லிவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்.
"வாழ்த்துக்கள் நிவேதா, ஸ்வீட் எடுத்துக்கோ, நீங்களும் ஸ்வீட் எடுத்துக்கோங்க''"
நிவேதாவின் அப்பா அம்மாவுக்கும் ஸ்வீட் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.
"எதற்கு ஸ்வீட்?'' என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார்கள் வேலுமணியும், வசந்தியும்.
"இன்னைக்கு வந்திருக்கிற ப்ளஸ் டூ ரிசல்ட்டுல நிவேதாதான், பள்ளிக்கூடத்துலேயே முதல் மதிப்பெண். பொதுவா அரசாங்க விதிப்படி "ரேங்க்' சொல்லக்கூடாது, இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சொல்றேன்''"
நிவேதாவின் அப்பாவிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.
பிறகு நிவேதாவை திருப்பிப் பார்த்தார்.
"என்ன நிவேதா... பள்ளிக்கூடமே உன்னை வலைபோட்டு தேடிக்கிட்டு இருக்கு, நீ இன்னைக்கு பள்ளிக்
கூடம் பக்கமே வரல... போன் போட்டும் எடுக்கல... அதான் என்னாச்சுன்னு விசாரிச்சிடடுப் போகலாம்னு வந்தேன், ஏதாவது உடம்புக்கு முடியலையா நிவேதா?''"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், பாப்பா டாக்டருக்குப் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருக்கா, அதுல எங்களுக்குள்ள கொஞ்சம் வாக்கு வாதம் அவ்ளோ தான்''"
வேலுமணி பதில் சொன்னார்.
"வெரிகுட், உண்மையிலேயே டாக்டருக்குப் படிக்கறதுக்கு தகுதியான பொண்ணு சார், நிவேதா. பள்ளிக்கூடத்துல எப்ப கேட்டாலும் " நான் டாக்டருக்குப் படிக்கணும்னுதான் சொல்லிகிட்டு இருப்பா, நிவேதா டாக்டருக்கு படிக்கறது பத்தி நான் நிறையவே அறிவுரை சொல்லிருக்கேன்''"
".......''"
"இந்த வருஷம் நீட் எக்ஸாம்க்கு அப்ளிகேஷன் போடலைன்னா பரவால்ல நிவேதா. அடுத்த வருஷம் எழுதலாம். இப்போதிருந்தே தயாராகணும். நீட் எக்ஸாம் பெரிய கஷ்டமே கிடையாது. இப்போ இருக்கற தமிழ்நாட்டு புத்தகங்களைப் படிச்சாலே போதும்! இதுல மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு சமமா இருக்கு, இதைப் படிச்சா போதும் எளிமையா பாஸ் பண்ணிடலாம்''"
"ரொம்ப நன்றி சார்''"
"நிறையப் பேர் எப்படி தயார் ஆகணும்னு தெரியாம இருக்காங்க நிவேதா. நீ அப்படி இல்ல, உனக்கு நல்லா தெரியும், இருந்தாலும் சில ஷாட்கட் சொல்றேன் நிவேதா."இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடங்கள். இதுல உனக்கு தாவரவியல், விலங்கியல் நல்லா வரும். அதை மட்டும் ரொம்ப நல்லா படிச்சா போதும். முன்னூத்தி ஐம்பது மார்க் வரை எடுத்திடலாம். அப்புறம் இயற்பியல், வேதியியல்ல உனக்கு தெரிஞ்ச கேள்விக்கு பதில் எழுதினாலே, நானூறு மார்க் தாண்டிடலாம். கவர்மெண்ட் காலேஜுக்கான கட் ஆஃப் கிடைக்கும்''"
பாடமே நடத்தி முடித்திருந்தார் தலைமை ஆசிரியர். அது பெரிய நம்பிக்கையாக இருந்தது நிவேதாவுக்கு. 
அடுத்த நாளில் இருந்தே தீவிரமாக படிக்கத் தொடங்கிவிட்டாள் நிவேதா. முதலில் பழைய தேர்வுகளின் வினாக்களை எடுத்து மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்த்தாள். எந்தெந்த பாடங்களில் மதிப்பெண் குறைவாக இருக்கிறதோ அந்தப் பாடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிப்பாள்.
அதிகாலை எழுந்து படித்து விட்டு, ஒன்பது மணிக்கு கோச்சிங் சென்டர் போய் விடுவாள். மறுபடியும் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள்.
பல நாட்கள் தூங்காமல் கூட விடிய விடிய நிவேதா படிப்பதைப் பார்த்து அம்மா பதறியிருக்கிறாள். இரவு இரண்டு மணிக்கு எழுந்து காபி போட்டு கொடுப்பாள் அம்மா.
அம்மாவை நன்றிப் புன்னகையோடு பார்ப்பாள் நிவேதா.
கஷ்டப்பட்டு படித்த நீட் தேர்வு ரிசல்ட் இன்று.
பதைபதைப்போடு வீட்டில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தாள் நிவேதா.
" "யா... சக்சஸ்'' என்று கத்திய நிவேதாவின் முகம் அடுத்த நொடியே வாடிப்போய்விட்டது."
முன்னூற்றி எழுபத்திரெண்டு மதிப்பெண்கள் நல்ல மதிப்பெண்கள் தான். ஆனால் கவர்மெண்ட் காலேஜ் கட்-ஆஃப் க்கு நான்கு மதிப்பெண்கள் குறைந்து போயிருந்தது. முன்னூற்றி எழுபத்தாறு மதிப்பெண்களோடு கட்-ஆப் நின்று போய்விட்டது.
"என்ன நிவேதா, பாஸ் பண்ணிட்டியா ? எவ்வளவு மார்க்?'' "
கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அப்பா.
"அப்பா, நான் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிருக்கேன்ப்பா, முன்னூற்றி எழுபத்திரண்டு மார்க். ஆனா கவர்ன்மெண்ட் காலேஜ்ல சீட் வாங்கற அளவுக்கு மார்க் வரலப்பா, ஜஸ்ட் நாலு மார்க்ல மிஸ் பண்ணிட்டேம்பா''"
"உங்ககிட்ட போட்ட சவால்ல நான் தோத்துட்டேம்ப்பா...ஸாரிப்பா''"
கண்களில் இருந்து நீர் வழிந்தது நிவேதாவுக்கு.
அப்பாவின் இறுக்கமான முகத்தைப் பார்த்து பயந்து கொண்டிருந்தாள் நிவேதா. அப்பா என்ன சொல்லப் போகிறார் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. திட்டுவாரா? கல்யாணப் பேச்சை எடுப்பாரா?
அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள் நிவேதா.
"இல்லடா செல்லம் நீ தோற்றுப் போகலடா, உண்மையிலேயே ஜெயிச்சிருக்க''"
அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் நிவேதா. கண்கள் இன்னும் கலங்கின.
"உண்மையிலேயே நீ ஜெயிச்சிருக்க நிவேதா. ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சி நல்ல மார்க் வாங்கியிருக்க. உன் மனசு முழுக்க நீ டாக்டருக்கு படிக்கணும் என்கிற வெறி இருக்கு. உன்னோட கனா டாக்டர் ஆகணுங்கிறது தான். கவர்ன்மென்ட் காலேஜ் கட்-ஆப் நூலிழையிலதான் மிஸ் ஆயிருக்கு. இதெல்லாம் தோல்வியே கிடையாது. நீ ஜெயிச்சுட்ட. உன் விருப்பம் போலநீ டாக்டருக்கு படிக்கலாம். ஒண்ணு நம்ம நகை, இடத்தை வித்து உன்னை பிரைவேட் காலேஜ்ல படிக்க வைக்கிறேன். இல்லன்னா, இன்னொரு வருஷம் படிச்சு அடுத்த வருஷம் நீட் எழுது. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்''" என்று சொன்ன அப்பாவை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் நிவேதா.

முதல் பரிசு பெற்றுள்ளஆதலையூர் சூரியகுமார் கும்பகோணம் அருகே உள்ள தென்குவவேலி அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். பல்வேறு தமிழ் வார, மாத இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கிறார். தினமணி சிறுகதைப் போட்டிகளில் தற்போது இவர் ஐந்தாவது முறையாகப் பரிசு பெறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com