அரசன் ஒருவன் ஆராயாமல் இரண்டு துறவிகளை சிறையில் அடைத்துவிட்டான். பின்னர் உண்மை தெரிந்ததும் மனம் திருந்தி அவர்களை விடுதலை செய்தான்.
வெளியே வந்த முதல் துறவி மற்றொரு துறவியிடம்,
"நீ அரசனை மன்னித்துவிட்டாயா?'' என்று கேட்டார்.
" இல்லை...'' என்றார் இரண்டாமவர்.
உடனே முதல் துறவி மெதுவாக, " அப்படியானால் நீ இன்னமும் அரசனின் சிறையில்தான் இருக்கிறாய்''
என்றார்.
நெ.இராமன், சென்னை}74.