இந்தியாவின் முதல் செயற்கைகோளுக்கு "ஆர்யபட்டா' என பெயர் சூட்டப்பட்டது. இந்திய அறிவியல் மேதையை கௌரவிக்கவே இப்பெயர் சூட்டப்பட்டது. கி.பி. 476-இல் பிறந்த இவர், உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரை சந்திரகுப்த மௌரியர் அந்த பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் ஆக்கினார். தன் 23 வயதில் எழுதிய நூல் தான் ஆர்யபட்டீயம். இந்த நூலே உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
----------------------------------------------
இந்தியாவின் முதல் செயற்கைகோளுக்கு "ஆர்யபட்டா' என பெயர் சூட்டப்பட்டது. இந்திய அறிவியல் மேதையை கௌரவிக்கவே இப்பெயர் சூட்டப்பட்டது. கி.பி. 476-இல் பிறந்த இவர், உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரை சந்திரகுப்த மௌரியர் அந்த பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் ஆக்கினார். தன் 23 வயதில் எழுதிய நூல் தான் ஆர்யபட்டீயம். இந்த நூலே உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
----------------------------------------------
ஜி.டி.நாயுடு விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்தி செடிக்கு "நாயுடு காட்டன்' என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.
ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
----------------------------------------------
பாரதியார் பாடல்
ஈரோடு கேசவலால் காளிதாஸ் சேட் காளிதாஸ் பிலிம் என்ற பெயரில் 1935-இல் "மேனகா' என்ற படம் எடுத்தார். அதில்தான் முதன்முதலில் "வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி' என்ற பாரதியார் பாடல் இடம் பெற்றது.
(புலவர் செ.இராசு எழுதிய "தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்' என்ற நூலிலிருந்து)
க.ரவீந்திரன், ஈரோடு