* "தண்ணீர் லாரிக்கு முன்னும் பின்னும் ஏன் போலீஸ் பாதுகாப்பு போகிறது? ''
"தண்ணீர் லாரியை யாரோ கடத்தப் போறதா போலீசுக்குத் தகவல் வந்திருக்கு''
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி .
* "என்னைக் கல்யாணம் பண்ணினதும் என் புருஷனுக்கு இருந்த தோஷம்
போயிடுச்சு''
"என்ன தோஷம்?''
"சந்தோஷம்''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* "நான் எது சொன்னாலும் என் மனைவி உடனே ஓ.கே.சொல்லிடுவா
"அப்படியா கேட்கவே சந்தோஷமா இருக்கே....''
"சமையல் ரெடி... உடனே சாப்பிடலாம்ன்னு நான் சொன்னா... உடனே ஓ.கே.சொல்லிடுவா''
விஜயா சுவாமிநாதன், திருச்சி -3
* "ஏம்ப்பா ஏட்டு இவன் என்ன கேஸ்ல மாட்டிக்கிட்டான்? ''
"தண்ணிப் பார்ட்டியாம்''
"என்ன புதுசா இருக்கு? ''
"எங்க தண்ணி கேன் இருந்தாலும்
திருடிட்டுப் போயிடுவானாம்''
ஆர்.எம்., திருநெல்வேலி .
* "முதலாளிக்கு இன்னும் பணத்தாசை போகலை...''
"எப்படிச் சொல்றே?''
"அங்கே எல்லாரும் சாமியைச்
சுற்றி வர்றாங்க. இவர் மட்டும்
உண்டியலைச்சுற்றி வர்றாரே?''
* "மருமகளே நான் உன்னைத் திட்டுற திட்டுக்கள் எல்லாம் உனக்கு மனவருத்தம் தரலேன்னா... என்னிடம் சொல்லு''
"எதுக்கு அத்தே?''
" நீ வருத்தப்படும்படியா மாற்றி திட்டணுமே.... அதுக்குத்தான்''
கே.அருணாசலம், தென்காசி.
* "மாப்பிள்ளை தங்கமானவர். ரொக்கமா
ரெண்டு லட்சம் தர்றேன்னு சொன்னேன்.
வேண்டாம்னுட்டார். 20 பவுன் போடுறேன்னு
சொன்னேன். வேண்டாம்னுட்டார். ''
"ரொம்ப தங்கமானவரா தெரியுறாரே.... அப்புறம்?''
"என் பொண்ணையும் வேண்டாம்னுட்டாரே''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
* "கூட்டத்திலே பேசிக் கொண்டிருந்த தலைவர் செருப்பு வந்து விழுந்ததும்
ஏன் ஒரே குழப்பமாயிட்டார்?''
"கூட்டத்திலே பார்வையாளர் ஒருவர் மட்டும்தான் இருந்தாராம். ஆனால் ரெண்டு ஜோடி செருப்புகள் மேடையிலே வந்து விழுந்துஇருக்கு. அது எப்படின்னு குழப்பமாயிட்டார்
ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி.