குமரன் மிகவும் கஞ்சன். தான் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்த பணத்தைத் தான் இறந்த பின்பு கூட பிறர் அனுபவிக்க அவன் விரும்பவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த அவன், இறப்பதற்கு முன்பு மனைவியிடம், தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் தனது சவப்பெட்டியில் வைத்து தன்னோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டான்.
சில நாட்களில் அவன் இறந்துபோனான். உறவினர்கள் எல்லாருக்கும் இது தெரியும் என்பதால், அடக்கம் செய்யும் நாளன்று சவப்பெட்டியில் வைக்கப் போகும் பணத்தைக் காண எல்லாரும் ஆவலாக இருந்தார்கள்.
ஆனால் குமரனின் மனைவி பணத்தை வைக்கவில்லை. ஒரு கவரை மட்டும் உள்ளே வைத்தாள்.
எல்லாரும் பணத்தை ஏன் சவப்பெட்டியில் வைக்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு குமரனின் மனைவி சொன்னாள்:
"அவருடைய பணத்தை எல்லாம் என் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவர் பெயருக்கு செக் ஒன்றைக் கவரில் வைத்து சவப்பெட்டியில் வைத்திருக்கிறேன். அதை அவர் பேங்கில் போட்டு எடுத்துக் கொள்ளட்டும்''.
அ.பூங்கோதை, செங்கல்பட்டு.