மருத்துவ மாணவர்களின் பொக்கிஷங்கள்!

இன்று மருத்துவம் படிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக  மாறிவிட்டது.
மருத்துவ மாணவர்களின் பொக்கிஷங்கள்!

இன்று மருத்துவம் படிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக  மாறிவிட்டது.

இன்று தேர்வுக்கு மேல் தேர்வு எழுதி மருத்துவக்  கல்லூரியில் சேர்ந்தால், மாணவர்கள் படிக்கும் பல்வேறு புத்தகங்கள் எல்லாமே வெளிநாட்டு மருத்துவர்கள் எழுதிய புத்தகங்களாகத்தான் இருக்கின்றன. மருத்துவ மாணவர்களுக்குப் புத்தகம் எழுதும் ஆற்றல் இந்தியாவில் ஒருவருக்குமே இல்லையா? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதை மாற்ற விரும்பினார் ஒருவர். அவர்தான் பேராசிரியர் டாக்டர்.டி.வி.தேவராஜன். 

சுமார் 30 வருடங்களாக மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் (Madras medical College) ஒரு ரூபாய் பணம் கூட  வாங்காமல் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார். இந்த அனுபவத்தின் மூலம் இவருக்குத் தோன்றிய யோசனைதான், நமது மருத்துவ மாணவர்களுக்கு நாம் ஏன் ஒரு புத்தகம் எழுதக் கூடாது என்பது.  அதற்கு இவரது மனைவியும், மகப்பேறு மருத்துவருமான லக்ஷ்மி தேவராஜன் புத்தகம் எழுதியே ஆகவேண்டும் என்று சொன்னதுடன் நில்லாமல் மகப்பேறு மருத்துவத்தை பற்றி ஒரு சிறந்த கட்டுரையும் எழுதித் தந்து விட்டார். 

இப்படி ஆரம்பித்தார் டாக்டர் தேவராஜன். ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 11 ஆண்டுகள் அதற்காகவே தனது பல்வேறு பணிகளை ( இவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவர்) ஒதுக்கி வைத்து விட்டு புத்தகத்திற்காக உழைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் அந்த புத்தகம் வெளிவந்தது எல் லாராலும் பாராட்டப்பட்டது. 

"சிலவற்றை நாம் சேர்த்து இருக்கலாமோ' என்று  வெளியான புத்தகத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்ததும் டாக்டர் தேவராஜனுக்குத் தோன்றியது. அதன் விளைவே சென்ற வாரம் வெளியான நான்கு புத்தகங்கள். முதல் புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான Apollo Hospitals Textbook of Medicine புத்தகத்தின் இரண்டாம் பாகம். இந்த புத்தகத்தை அப்போலோ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி வெளியிட,  விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். 

ஏ.கணேசன் பெற்றுக் கொண்டார்.Rmk குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் 5000 MCQ in Medicine என்ற புத்தகத்தை வெளியிட, அப்போலோ குழுமத்தின் இஉஞ சிவகுமார் பெற்றுக் கொண்டார். புரொஃபசர் டாக்டர். ஆர்.ஜெயந்தி A to Z 1000 pearls in Medicine என்ற புத்தகத்தை வெளியிட, அதை விநாயகா மிஷனைச் சேர்ந்த டாக்டர்.அனுராதா கணேசன் பெற்றுக் கொண்டார். Completion of 300 Cases in Apollo advance Fever Clinic என்ற புத்தகத்தை வைரமுத்து வெளியிட, அப்போலோ குழுமத்தின் இயக்குநரான டாக்டர்.சத்யபாமா பெற்றுக் கொண்டார். இந்த வெளியீட்டுக்குப்பின் பேசிய அப்போலோ குழுமத்தின் தலைவரான பிரதாப் சி.ரெட்டி,   டாக்டர்.தேவராஜனை மிகவும் புகழ்ந்து பேசினார்: ""இவருக்கு இரண்டே இரண்டுதான் தெரியும். ஒன்று மருத்துவம், மற்றொன்று எழுத்து. அதனால்தான் அவரால் 4 புத்தங்களையும் ஒரே வருடதில் எழுதி வெளிக்கொணர  முடிந்தது. எங்கள் அப்போலோ குழுமம் மருத்துவ மாணவர்களுக்கு செய்யும் தொண்டாக நான் இதை நினைக்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் டாக்டர். தேவராஜனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கூறியதாவது:“""முதல் புத்தகம் எழுத 11 வருடங்கள் ஆனது. இந்த நான்கு புத்தகங்கள் எழுத எனக்கு ஒரு வருடம் தான் பிடித்தது. இந்த இரண்டாம் புத்தகத்தை பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கிளாஸ்கோ என்ற இடத்தில் உள்ள  Royal college of physician தலைவர் டேவிட் "மருத்துவ மாணவர்களுக்கு இவை போக்கிஷங்கள்' என்று மிகவும் பாராட்டி இருக்கிறார். அதுபோன்று British medical journal தலைமை ஆசிரியரான Fianona Goodly தனியாக ஒரு பாராட்டுக் கடிதமே எழுதியுள்ளார். தினமும் இரவு 8 மணி முதல் தூக்கம் வரும் வரை இந்த புத்தக வேலையில் முழ்கி இருப்பேன். 14 chapter களை இதில் நானே எழுதி உள்ளேன். இந்திய நோய்களும் அதன் தோற்றம் மற்றும் சிகிச்சை முறைகளும், இந்த இரண்டாம் புத்தகத்தில் இருக்கிறது. இந்த இரண்டாம் புத்தகத்தில் 1000 charts, 1000 புகைபடங்கள், 1000 ஷ் ழ்ஹஹ்ள் இருக்கு'' என்றார் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். தேவராஜன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com