• "மன்னர் ஏன் மார்கழியில் போரை வைத்துக்
கொள்ளலாம் என்கிறார்?''
"அப்போதுதான் எதிரிகள் மன்னரைப் பார்த்து
நடுங்குவார்களாம்.
உ.சபாநாயகம், சிதம்பரம்.
• "எங்களுக்கு பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு.
கல்யாணத்துக்கு பொண்ணுக்கு என்ன போடுவீங்க?''
"கை, காலுக்கு மருதாணி, நகத்துக்கு நகபாலீஷ், தலைமுடிக்கு ஹேர் கலர் ஷாம்பு, உதட்டுக்கு
லிப்ஸ்டிக் இவ்வளவும் போடுவோம்''
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
• "அந்த பெரியவர்
சரியான சாப்பாட்டு பிரியர்னு
எதை வச்சு சொல்றீங்க?''
"பல் போனால்
பக்கோடா போகும்னு
புதுமொழி சொல்லிட்டுப் போறாரே''
கே.முத்தூஸ், தொண்டி.
• பக்கத்து வீட்டுக்காரர்: நாளையிலிருந்து உனக்கும், உன் வீட்டம்மாவுக்கும்
சண்டை வரப்போகுது?
இவர்: ஏன் அப்படி சொல்றீங்க?
பக்கத்து வீட்டுக்காரர்: என் மனைவிக்கு புதுசா ஒரு வைர நெக்லஸ்
வாங்கிக் கொடுத்திருக்கேனே
கே.ஈ.கே, விழுப்புரம்.
• "அப்பா ... இன்னிக்கு
தான் எங்க சார் உங்கள
பாராட்டினாங்க''
"எதுக்குடா...?''
"ஹோம் ஒர்க் சரியா
இருந்துச்சாம்''
ம.வேதவள்ளி, பொரவச்சேரி.
• அப்பா : எதுக்கு சார்
என் பையனை அடிச்சீங்க?
ஆசிரியர்: ஏன்டா ஹோம் ஒர்க்
பண்ணலன்னு கேட்டா,
நான் ஹாஸ்டல்ல
தங்கிப் படிக்கிறேன் சார்ன்னு
சொல்றான் சார்
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.