ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரோனாவிலிருந்து தப்பிக்க!

நம்மைப் பெரிதும் பாதித்திருக்கும் இந்த கரோனா வைரஸ்   பண்டைய பாரத தேசத்தில் இருந்திருக்கிறதா?  தொற்று உபாதையான இதை நம் முன்னோர்கள் எப்படிச் சமாளித்திருக்கக் கூடும்?  
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரோனாவிலிருந்து தப்பிக்க!

நம்மைப் பெரிதும் பாதித்திருக்கும் இந்த கரோனா வைரஸ் பண்டைய பாரத தேசத்தில் இருந்திருக்கிறதா? தொற்று உபாதையான இதை நம் முன்னோர்கள் எப்படிச் சமாளித்திருக்கக் கூடும்? அவை அனைத்தும் இன்று நடைமுறையில் சாத்தியப்படுமா?

மனோகரன், கும்பகோணம்.

நன்மைகளுக்கு இடையூறு விளைவிக்கும்ஆத்யாத்மிகம் -உடலில் வாத, பித்த, கபங்களின் கெடுதியினால் விளையும் கோபம், பொறாமை, பித்துபிடித்த நிலை போன்ற மனம் சார்ந்த உபாதைகள்,ஆதி பெளதிகம் - பாம்பு, புலி, எலி போன்ற துஷ்ட விலங்குகளாலும், திருடர், எதிரி முதலியவர்களாலும் ஏற்படும் விஷத்தீண்டுதல், அடிதடி காயம் போன்றதுன்பங்கள்,ஆதி தைவிகம் -காற்று, மழை, பனி, வெயில் முதலிய இயற்கை வேகங்கள் கால விபரீதத்தால் தன்னிலை மாறி விளைவிக்கும் துன்பங்களும், பேய், பிசாசு, சூனியம் முதலியவற்றால் உண்டாகும் கஷ்டங்கள்,

சாம்கிராமிகம் எனும் ஒட்டுவாரொட்டிகள் போன்றவை நீங்கள் குறிப்பிடுவதுபோல பண்டைய பாரத தேசத்தில் இருந்ததற்கான ஆதாரங்களை ஆயுர்வேதம் எடுத்துக்காட்டியுள்ளது.

அவற்றைக் குணப்படுத்தும் நோக்கில் எண்ணற்ற மூலிகைகளை ஆயுர்வேதம் பரிந்துரை செய்தபோதிலும், மறையோதும் முறைகளையும் சேர்த்தே அதன் உபதேசங்கள் இருந்திருக்கின்றன. ஆருணகேதகம் என்ற வேள்வியின் துவக்கத்தில், " ஹே தேவர்களே! மங்களமான சொற்களையே கேட்கும் பாக்கியத்தை எங்கள் செவிகள் பெறட்டும். மங்களமான நிகழ்ச்சிகளையே பார்க்கும் வாய்ப்பை எங்கள் கண்கள் பெறட்டும்.

உங்களை வழிபடும் நாங்கள் வன்மையோங்கிய உடல் உறுப்புகளுடன் சிறப்புற்றவர்களாக, பிரம்ம தேவனளித்த நூறாண்டுகள் ஆயுளைப் பெற்று வாழ்வோமாக.

முன்னோர்களால் புகழ்ந்து வழிபடப்பட்ட இந்திரன் எமக்கு நன்மை அளிப்பானாக. சகல ஞான ஒளி வடிவனான பூஷா - சூரியன் எமக்கு ஞானமடையும் ஆற்றலை அருள்வானாக.

இம்சைகளைக் களைய வல்ல கருடதேவன் விஷ ஜந்துக்களின் தீங்குகளை விலக்கி எமக்குத் தருவானாக. வாக்கின் பிருஹஸ்பதி பிரம்மவர்ச்சûஸ வளர்த்து நலம் செய்வானாக' என்று சமூக நலம் கருதிஓதினார்கள்.

எந்தவிதமான துறையிலும் ஈடுபடுவதற்கு திடமான உடல் புலன்களும் நீண்ட ஆயுளும் இன்றியமையாச் சாதனங்கள். இச்சாதனங்கள் சிறப்புற்று விளங்கவும், அடைய வேண்டிய மங்கள பலன்கள் இடையூறின்றிக் கிடைக்கவும் முதலில் தேவர்களின் அருள் மிகவும் அவசியமானது. அவ்வருள் மேற்குறிப்பிட்ட மந்திரங்களால் கிடைக்கும். இதனால் உலகம் முழுவதும் நற்பயன்களை அடையும்.

இதுபோன்ற நுண் அணுக்கிருமிகள் உடலைத் தாக்காதவாறு தரமான மருந்துகளையும் ஆயுர்வேதம் பரிந்துரைத்திருக்கிறது.

1. லவங்கப்பட்டை, துளசி, சுக்கு மற்றும் மிளகைப் பொடித்து, துணியால் சலித்து, அதிலிருந்து ஐந்து கிராம் மட்டும் எடுத்து முன்னூறு மில்லி லிட்டர் தண்ணீருடன் கலந்து , நன்கு காய்ச்சி, நூற்றி ஐம்பது மில்லி லிட்டராக வற்றியதும், வடிகட்டி ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாகப் பருகி வர, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களில் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

2. கோரைக் கிழங்கு, ஆடாதொடை, பேய்ப்புடல், சீந்தில் கொடி, தனியா, சுக்கு மற்றும் சிவதைவேர் கொண்டு மேல் குறிப்பிட்டபடி கஷாயம் தயாரித்து இரவில் படுக்கும் முன் சாப்பிடுவதாலும், வைரஸ் உடலைத் தாக்காதவாறு பாதுகாக்கலாம்.

3. சீந்தில் கொடி, சுக்கு, கடுக்காய், திப்பிலி ஆகியவற்றைக் கொண்டு முன் குறிப்பிட்டபடி கஷாயம் தயாரித்து, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குடல் உபாதைகளைத் தவிர்த்து, பசி கெட்டுவிடாமல் பாதுகாப்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். இவை அனைத்தும் இப்போது ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கின்றன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com