""கண்ணில் பட்ட புத்தகம் எல்லாவற்றையுமே படிச்சிடுவேன்''
""கண்ணில் பட்டா கண் கலங்கிடுமே... அப்புறம் எப்படி நீ படிப்பே?''
அமுதா அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி
""நீங்கள் எப்படி இந்த ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தீர்கள்?''
""இரண்டாவதாக வந்தவருக்கு கடன் பாக்கி தர வேண்டுமே''
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன் கோட்டை.
""மூணு தோசை, எட்டு இட்லி, நாலு பரோட்டா சாப்பிட்டிருக்கீங்க... வேறு ஏதும் வேண்டுமா சார்?''
""வேண்டாம் சர்வர்... எனக்கு உடல்நிலை சரியில்லை... இதுவே போதும்''
எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி