""ஏங்க... அந்த டீக்கடைக்குத் தினமும் போறீங்க... ஆனால் டீ குடிக்காம திரும்பி வந்துடுறீங்க...
ஏன்?''
""இன்று கடன் கிடையாது'னு அந்த டீக்கடையிலே போர்டு வச்சிடுறாங்களே... அதான்''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
""என்னங்க அந்த டிவியில் நைட்டி போட்டுக்கிட்டு செய்தி வாசிக்கிறாங்க?''
""அவங்க "ஒர்க் ஃபிரம் ஹோம்' பண்ணுறாங்க.''
-ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை.
""அந்த தலைவரோட பேச்சு மாநிலத்துல பெரிய புயலை உண்டாக்கிடிச்சே...?''
""அதுக்காக மத்திய அரசுகிட்ட 1000 கோடி ரூபாயை புயல் நிவாரண நிதி கேக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க...''
-வி. ரேவதி, தஞ்சை