பிரேம்சோப்ராவின் பரிகாசம்!

ஒருமுறை, ஹிந்தி சினிமா நடிகர் பிரேம்சோப்ரா நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பசுபதி நாதர் கோயிலுக்குச் சென்று வந்தார். விமான நிலையத்தில் ஒரு சுங்க அதிகாரி அவருடைய பெட்டியைச் சோதனை செய்து,

ஒருமுறை, ஹிந்தி சினிமா நடிகர் பிரேம்சோப்ரா நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பசுபதி நாதர் கோயிலுக்குச் சென்று வந்தார். விமான நிலையத்தில் ஒரு சுங்க அதிகாரி அவருடைய பெட்டியைச் சோதனை செய்து, விஸ்கி பாட்டில் ஒன்று எடுத்தார்.
 "இந்த பாட்டிலில் என்ன இருக்கிறது'' என்று அதிகாரி கேட்டபோது, பிரேம்சோப்ரா, "அதில் காத்மாண்டு பசுபதி நாதர் கோயிலிலிருந்து கொண்டு வந்த புனித நீர் இருக்கிறது'' என்றார்.
 அதிகாரி, "அதில் என்ன விசேஷம்?'' என்று கேட்க, அவர் "இதை தேங்காய் எண்ணெய் என்று நினைத்தால், தலையில் தேய்த்துக் கொள்ளலாம். தைலம் என்று நினைத்தால் உடலில் பூசி வலியை நீக்கிக் கொள்ளலாம். புனித நீர் என்று நினைத்தால், சிறிது குடித்து உடல் நோயைத் தீர்த்துக் கொள்ளலாம்'' என்றார்.
 அதிகாரி அதை நம்பவில்லை. பாட்டிலை இன்னொருமுறை பார்த்துவிட்டு இது விஸ்கி பாட்டில் போல இருக்கிறதே என்று கூறிவிட்டு, பாட்டிலைத் திறந்து கொஞ்சம் வாயில் ஊற்றிப் பார்த்துவிட்டு, "ஆமாம் இதென்ன வாசனையும், சுவையும் விஸ்கி போலத்தான் உள்ளது. இது விஸ்கி பாட்டில்தானே'' என்று கேட்டார். அதற்கு பிரேம்சோப்ரா, "நான்தான் சொன்னேனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாக அது மாறிவிடும். நீங்க இதை விஸ்கியா நினைக்கிறீங்க. அதனால் விஸ்கி போல் தெரிகிறது'' என்று குறும்பாகச் சொன்னார்.
 அதிகாரியின் முகம் அஷ்ட கோணலாகியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com