வீட்டிலேயே  உள்ள மருந்து!

கரோனோ வைரஸ் தொற்றுக்கு மருந்துகண்டுபிடிப்பதற்காக உலகம் எங்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
வீட்டிலேயே  உள்ள மருந்து!

கரோனோ வைரஸ் தொற்றுக்கு மருந்துகண்டுபிடிப்பதற்காக உலகம் எங்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மருந்தே கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் நலம் பெற்று வீடு திரும்பினார்கள் என செய்திகள் வருகின்றன. மருந்தே இல்லாமல் எப்படி நலமடைய முடியும்? என்ற கேள்வி எழுந்தாலும், உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்தினால் எப்பேர்ப்பட்ட வைரஸூம் கொஞ்சம் மிரளத்தான் செய்யும் என்பது உண்மை. கரோனாவும் அதற்கு விதிவிலக்கல்ல. உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் மருந்துகள் உள்ளன. அவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்து விட முடியும். எப்படித் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரைக் கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒரு நாளைக்கு 2 - 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பாக்டீரியா தொற்றால் நமக்கு எவ்விதப் பாதிப்பும் வராது. நாட்டு மருந்துக் கடைகள் எல்லாம் மூடி இருக்கிறதே... கபசுரம் கிடைக்கவில்லையே, நிலவேம்பு கிடைக்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

இஞ்சி, கருப்பு மிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் போது ஒரு தனிச்சிறப்பான வேதியல் மாற்றம் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பாக்டீரியாவையும் கொன்று விடும்.

தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு அழிப்பது? என மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்கிறது. அத்தகைய இந்த கரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாயாவிகளையும் அழிப்பவைதாம் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக சேர்த்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். மேலும் கரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தைக் காட்டிலும், நிலவேம்பைக் காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்.

உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்போது கூட உங்கள் வீட்டில் இருக்கும்.

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அஞ்சறைப் பெட்டியும் ஒரு மருத்துவமனைக்குச் சமம். அதை நாம் புரிந்து கொள்ளாததாலும், நாம் நமது பாரம்பரிய உணவுகளைக் கைவிட்டதாலும், எந்தெந்த உணவுப் பொருளை எந்த உணவுப் பொருளோடு சேர்த்து உண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாததாலும், இது போன்ற பிரச்னைகள் வருகின்றன.

இஞ்சி, மிளகு, எலுமிச்சைசாறு நீரைக் கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கரோனா நோயைக் கட்டுப்படுத்தினார்கள். உயர்தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கின்றன. நாமும் அந்த வழியைப் பின்பற்றி கரோனா எனும் மாயாவியைக் கொல்வோம்.

கரோனா பாதிப்பு மேலும் அதிகமாகாமல் தடுக்க, நம்மை நாம் காத்துக் கொள்ள இந்த வீட்டிலேயே உள்ள எளிய மருந்தை பயன்படுத்துவது சிறந்தது. செலவும் மிகவும் குறைவு.

இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தாம். அதனால் இந்த அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் தெரிந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கரோனாவின் பிடியில் இருந்து நாம் மீட்டு விடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com