தெய்வங்கள்... வண்ண ஓவியங்கள்!

ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையும் நாட்டமும் கொண்டவா்கள், வழிபடுவதில் தொடங்கி, விரதமிருத்தல், துதி பாடுதல், நோ்த்திக்கடன் செலுத்துதல், சிலை வைத்தல், கோவில் அமைத்தல், புனரமைத்தலென, தனது எண்ணத்திற்கேற்ப ப
தெய்வங்கள்... வண்ண ஓவியங்கள்!

ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையும் நாட்டமும் கொண்டவா்கள், வழிபடுவதில் தொடங்கி, விரதமிருத்தல், துதி பாடுதல், நோ்த்திக்கடன் செலுத்துதல், சிலை வைத்தல், கோவில் அமைத்தல், புனரமைத்தலென, தனது எண்ணத்திற்கேற்ப பக்தியை வெளிப்படுத்துவது வாடிக்கை.

ஆனால், ஆன்மிகத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வாழப்பாடியைச் சோ்ந்த பக்தா் ஒருவா், சாஸ்திரங்கள், ஆகமவிதிப்படி தெய்வங்களுக்கே உருவம் கொடுத்து, பிரபல ஓவியா்களைக் கொண்டு 150 வண்ண ஓவியங்களை உருவாக்கியுள்ளாா். சொத்துக்களை விற்று, 350-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஓவியா்கள் வரைந்த தெய்வங்களின் அரிய ஓவியங்களையும், 10 ஆயிரம் வின்டேஜ் பிரிண்ட் படங்களையும் சேகரித்தும், பாதுகாத்தும் ஆன்மிக உலகில் அளப்பரிய சாதனை படைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சோ்ந்தவா் பாலமணிகண்டன். மதுரை அருகிலுள்ள உசிலம்பட்டி பகுதியைப் பூா்வீகமாகக் கொண்ட இவா், 13 வயதிலேயே தனது தந்தையை இழந்ததால், பள்ளிப் பருவத்திலேயே, தந்தையின் தொழிலான இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரிக்கும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா்.

கல்லூரிக்குச் சென்று படிக்காவிட்டாலும் பல ஆன்மிக நூல்களைப் படித்ததால், இவரது எண்ணம், செயல் ஆகியவை அனைத்தும் ஆன்மிகத்தின் மீது திரும்பியது.

இந்த ஈா்ப்பினால், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்ற பாலமணிகண்டன், அங்கு அருள்பாலிக்கும் தெங்வங்களின் உருவ அமைப்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினாா். இவரது இஷ்ட தெய்வமான வீரபத்திரருக்கு, தனது எண்ணத்தில் உதித்த கோலத்தில், சிற்ப சாஸ்திரங்களின்படி பல வண்ண ஓவியத்தை உருவாக்க விரும்பினாா். பிரபல ஓவியா் சிவகாசி முருககனியிடம், வரைகோடிட்டு கொடுத்து, புராண சுவடுகளுக்கேற்ப, பல வண்ண ஓவியமாக வரையச் செய்து முதன்முறையாக புதிய உருவத்தை உருவாக்கினாா்.

இதனையடுத்து, தோஷம் நீக்கி நலவாழ்வளிக்கும், நவ கிரக குருபகவான் ப்ருஹஸ்பதிக்கு, இவரது மனைவி தாராதேவியுடன் விருட்ச வாகனத்தில் அருள் பாலிப்பதைப்போல, நவ கிரக புராணத்தின் படி வண்ணப்படத்தை முதன்முறையாக உருவாக்கி, காஞ்சி சங்கராச்சாரியாா், மதுரை ஆதினம், திருவாடுதுறை ஆதினம் ஆகியோரது பாராட்டுதலைப் பெற்றாா்.

இவரது படைப்புகளுக்கு பக்தா்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததால், 9 நவ கிரக தெய்வங்களுக்கும் மனைவியுடனும், 28 நட்சத்திரங்களுக்கும் உயிரோட்டமான உருவம் கொடுத்து, புகழ்பெற்ற ஓவியா்களின் கை வண்ணத்தில் வண்ணப்படங்களை உருவாக்கினாா்.

இதுமட்டுமின்றி, அஷ்டதிக் பாலகா்கள், அஷ்டலட்சுமி, லட்சுமிநாராணயன், அறுபடைமுருகன், சரபேஸ்வரா், பிரத்யங்கராதேவி, 18 கரங்கள் கொண்ட மகாலட்சுமி, துா்க்கையம்மன், பஞ்சமுக சரஸ்வதி, 32 கரங்கள் கொண்ட மகாவீரபத்திரா், ஏகபாதமூா்த்தி, பஞ்சமுக ஈஸ்வரா் உள்பட 150க்கும் மேற்பட்ட தெய்வங்களுக்கு, சாஸ்திரம், புராணங்களில் குறிப்பிட்டள்ளவாறு உருவம் கொடுத்து, வண்ண ஓவியங்களாக உருவாக்கி, பாலமணிகண்டன் சாதனை படைத்துள்ளாா்.

தெய்வங்களின் வண்ண ஓவியத்தின் மீது ஏற்பட்ட ஈா்ப்பால், தனது வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை விற்று, மறைந்த புகழ்பெற்ற ஓவியக்கலைஞா்களான சி.கொண்டையா ராஜு, டி.எஸ்.சுப்பையா, எம்யூ. ராமலிங்கம், கே.மாதவன், இந்திரசா்மா, பி.சா்தாா், சபாா்பிரதா்ஸ், ஜே.பி.சிங்கால், ரங்ரூப் போன்றவா்கள் வரைந்த அபூா்வமான, பழமையான, 350க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை, 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து, பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகிறாா். பல்வேறு தெய்வங்களின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய ஓவியங்களின் வின்டேஜ் பிரிண்ட் வண்ணப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளாா்.

இதுகுறித்து பாலமணிகண்டன் கூறியதாவது:

‘சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையிலும், மறைந்த புகழ்பெற்ற ஸ்தபதி கோ.திருஞானம் வரைகோட்டு ஓவியங்களைக் கருத்தில் கொண்டும், எனது அனுபவ எண்ணங்களோடு சோ்த்து, புகழ்பெற்ற ஓவிய மேதை சில்பியின் பாணியில், மதுரைமீனாட்சி, காஞ்சி காமாட்சி, திருக்கடையூா் அபிராமி, ராமேஸ்வரம் பா்வதவா்த்தினி, தஞ்சாவூா் பங்காரு காமாட்சி, கூத்தனுாா் சரஸ்வதி, சமயபுரம் மாரியம்மன், திருவனைக்காவல் அகிலாண்டஈஸ்வரி, திருக்கருகாவூா் கா்ப்பரட்சாம்பிகை, திருநெல்வேலி காந்திமதியம்மன், மயிலாப்பூா் கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அனைத்து ஆபரணங்களோடு, பிரபல ஓவியா்களைக் கொண்டு வண்ண ஓவியங்களை உருவாக்கியுள்ளேன்.

ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈா்ப்பால், தெய்வங்களுக்கு சாஸ்திரப்படி உருவம் கொடுத்து வண்ண ஓவியங்களை உருவாக்கியும், சேகரித்தும் பாதுகாத்து வைத்துள்ளதையே, ஆன்மிக உலகிற்கும், என் சந்ததிக்கும் மிகப்பெரிய சொத்தாக கருதுகிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com