சேலம் மாடர்ன் தியேட்டர்ஸாரின் "சதி அகல்யா' பூஜை விழாவுக்கு காங்கிரஸ் தலைவி ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
சேலத்தில் 1936 - இல் நடைபெற்ற காங்கிரஸ் கண்காட்சியை (முன்னாள் ஜனாதிபதி) வி.வி.கிரி தொடங்கி வைத்துப் பேசினார். கிரியின் பிரசங்கத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் செய்திப் படமாகத் தயாரித்து, தங்கள் "பத்மஜோதி' படத்துடன் திரையிட்டனர். தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் செய்திப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.