""விடியற்காலைல வாட்ஸ் அப்பில் என்ன மெசேஜ் வருது?''
""முட்டை போட்டாச்சுன்னு கோழி அனுப்புது''
ஏ. நாகராஜன்,
பம்மல்.
""சின்ன வயசுலேருந்தே அம்மா - அப்பா அடிச்சு வளர்த்ததோட பலன் இப்பத்தாங்க தெரியிது''
""எப்படி ?''
""இப்பல்லாம் பொண்டாட்டி அடிக்கும் போது கோபமே வர்றதில்லையே''
கணவன்: அரை மணி நேரமா நான் நாயா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்னடி அர்த்தம்?
மனைவி: எனக்கு நாய் பாஷை தெரியலேன்னு அர்த்தம்ங்க...
""தாடி, மீசையோடு வந்த பிச்சைக்காரனைப் பார்த்துட்டு, சாமியார்னு நினைச்சு லேடீஸ் சில பேர் வணங்க ஆரம்பிச்சாங்க''
""அப்புறம்...?''
""சாமியாராவே மாறி, இப்ப நல்லா வசதியா இருக்கான்''
கணவன்: என் நண்பனை நம்ம வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லியிருக்கேன்...
மனைவி: வீடு பாருங்க எவ்ளோ அலங்கோலமாக இருக்கு, பாத்திரம் கூட வெளக்கல, என்னால சமைக்க முடியாது.
கணவன்: பரவாயில்ல, அவன் கல்யாணம் பண்ற ஐடியால இருக்கான். கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு என்கிட்ட கேட்டான், வந்து பாத்துட்டுப் போடான்னு சொன்னேன் !
எம் அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
""வாழ்வுல உற்சாகம் பிறக்க ஒரு வழி சொல்லுங்க சாமி?''
""ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டு, அதுக்கு
"உற்சாகம்'ன்னு பேர் வச்சிடுங்க''
வி. ரேவதி,
தஞ்சை.