(திருநெல்வேலி என்ஜிஓ -பிகாலனியில் உள்ள ஓட்டல் எம்.ஜி.ஆர். உணவகத்தில்)
வாழ்வித்து வாழ்
ஜே.கமலம், திருநெல்வேலி-7
(விருகம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
இரண்டு இட்லி ஒரு வடை
அ. பச்சைப்பெருமாள்,
சென்னை-87.
(மயிலாடுதுறை மகாதான தெருவில் ஓர் ஆட்டோவில்)
துடிக்கின்ற இதயத்தை விட
நடிக்கின்ற இதயங்கள்தான் அதிகம்
ரா.ராஜதுரை,
சீர்காழி.
(சுசீந்திரம் கடைவீதியில் இருவர்)
""மாப்ள...தீபாவளி சட்டை எப்படி இருக்குதுனு பாரேன்...''
""அடடா... சூப்பரா இருக்கே... சரி, சட்டை எங்க எடுத்தே?''
""ஜவுளிக்கடையில்தான்''
மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.
(சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஓர் அடுக்ககத்தில் கணவன்-மனைவி)
""என்னங்க ஆபிசுக்கு குடிக்க வெந்நீர் வைச்சிருக்கேன்... ஈவினிங் டிபன் நெய் ரோஸ்ட் ரெடி பண்ணட்டுமா?''
""வீணா இன்னிக்கு நீ ஏமாறப் போற... அடுத்த வாரம் தான் எனக்கு போனஸ்''
கவிதா பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.
ஆசிரியர் பேசுறது புரியலைன்னா
வாயைத் திறந்து சந்தேகத்தைக் கேட்டுடணும்;
மனைவி பேசுறது புரியலைன்னா
வாயை மூடிக்கிட்டு சத்தமில்லாமப் போயிடணும்.
பி.கோபி,
புதுப்பேட்டை.
""ஹலோ, பாபுவா?''
""ஆமா, சொல்லுங்க''
""நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்... உங்க ஏடிஎம் கார்டு லாக் ஆகியிருக்கு''
""சரி''
""அதை ரிமூவ் பண்ண உங்க ஏடிஎம் கார்டு நம்பர் சொல்லுங்க, அப்புறம் பின்னாடி நாலு நம்பர் இருக்கும் அதையும் சொல்லுங்க... சீக்கிரம்''
""எந்த பேங்க்ல இருந்து கால் பண்றீங்க?''
""நீங்க எந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கிறீங்களோ, அங்க இருந்து தான் கூப்பிடுறோம்''
""அதான், எந்த பேங்க்?''
""ஓசிஓசிஓ பேங்க், சார்!''
""அந்த பேங்க்ல நீங்க யாரு?''
""நான் தான் மேனேஜர்''
""அப்ப நான் யாரு?''
""இல்லே சார், சீக்கிரம் நம்பர் சொல்லுங்க''
""டேய், நான் தான் அந்த பேங்க்
மேனேஜர். எனக்கே கால் பண்ணிட்டீங்களா?''
"".....''
நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.
வாங்கும் கடனும்,
தேங்கும் பணமும்,
வளர, வளர,
வாழ்க்கையைக் கெடுக்கும்!
-வி.ரேவதி,
தஞ்சை.