ஆர்தர் மில்லர் என்ற பிரபல எழுத்தாளரால் சூரிய வெளிச்சத்தில் எழுத முடியாது. மின்சார விளக்கின் ஒளியில்தான் எழுதுவாராம். ஒரே நேரத்தில் சிறுகதைகள், நாடகம், திரைக்கதை என்று எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்துவிடுவார்.
சிறுகதை ஒன்றைச் சுவையாய் எழுத ஆரம்பிப்பார். திடீரென்று அதை நிறுத்திவிட்டு திரைக்கதை ஒன்றின் ஏதாவது காட்சிக்கு வசனம் எழுத ஆரம்பித்து விடுவார். கதை எப்போது ஆரம்பித்து எப்போது முடிப்பார் என்று அவருக்கே தெரியாதாம். மர்லின் மன்றோவின் கணவராக இருந்த இவர், ஒரு விந்தையான எழுத்தாளர்தான்.